Mar 21, 2026
Thisaigal NewsYouTube
SOCSO-வில் தொழிலாளர்களை பதிய, முதலாளிமார்களுக்கு ஒரு மாத கெடு விதிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

SOCSO-வில் தொழிலாளர்களை பதிய, முதலாளிமார்களுக்கு ஒரு மாத கெடு விதிக்கப்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், மே 15-

சமூக பாதுகாப்பு அமைப்பான- SOCSO-வில், தங்களது தொழிலாளர்களை விரைந்து பதிவதற்கு, முதலாளிமார்களுக்கு 30 நாள் அவகாசம் வழங்கப்படுவதாக, அதன் தலைமை நிர்வாகி அஸ்மான் அஜீஸ் முகமது தெரிவித்தார்.

வழங்கப்பட்ட கால வரையறைக்குள் முதலாளிமார்கள், தத்தம் தொழிலாளர்களை பதிந்துக்கொண்டால், தண்டம் விதிப்பதிலிருந்தும் தாமதமாக சந்தாவை செலுத்தியதற்கான தண்டனையிலிருந்தும் அவர்களுக்கு விலக்களிப்பு வழங்கப்படும் என்றாரவர்.

வருகின்ற ஜூன் 1ஆம் தேதியிலிருந்து தமது தரப்பு OP KESAN சோதணையை மேற்கொள்ளவுள்ளது. அதன் கீழ், SOCSO-வில் தொழிலாளர்களை பதிய மறுக்கும் முதலாளிமார்களுக்கு அதிகபட்சமாக ஐந்தாயிரம் வெள்ளி தண்டம் விதிக்கப்படும்.

தாமதமாக சந்தாவைச் செலுத்தினால், ஆண்டுக்கு 6 விழுக்காடு வட்டி விதிக்கப்படும். அது தவிர, அத்தரப்பினர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படுவதோடு, அவர்களுக்கு 10 ஆயிரம் வெள்ளி வரையிலான தண்டம் அல்லது ஈராண்டுகள் சிறை அல்லது அவையிரண்டுமே விதிக்கப்படலாம்.

தொழிலாளர்களின் சமூக நலனை உறுதி செய்வதில், தமது தரப்பு விட்டுக்கொடுக்கும் போக்கைக் கொண்டிருக்காது என அஸ்மான் அஜீஸ் முகமது நினைவுறுத்தினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து