Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தெற்கு தாய்லாந்து தாக்குதலில் சிக்கிக் கொண்ட மலேசியர்களின் நிலை என்ன? விஸ்மா புத்ரா விளக்கம்
தற்போதைய செய்திகள்

தெற்கு தாய்லாந்து தாக்குதலில் சிக்கிக் கொண்ட மலேசியர்களின் நிலை என்ன? விஸ்மா புத்ரா விளக்கம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.11-

தெற்கு தாய்லாந்தின் யாலா, நராதிவாட், பட்டாணி ஆகிய மூன்று மாகாணங்களில் இன்று அதிகாலை நடந்த தொடர் தாக்குதல்களில், இதுவரை மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என வெளியுறவு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. பதற்றம் நிலவும் அந்தப் பகுதிகளில் தங்கியிருக்கும் அல்லது பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள், உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு உத்தரவுகளைப் பின்பற்றி மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டாலோ அல்லது தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க, அங்குள்ள மலேசியர்கள் உடனடியாகத் தங்கள் இருப்பிட விவரங்களை அதிகாரப்பூர்வமாகப் பதிவுச் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் உதவிக்காக சொங்க்லாவில் உள்ள மலேசியத் தூதரகத்தை எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாட்டில் நிலவும் இந்த இக்கட்டான சூழலை மலேசிய வெளியுறவு அமைச்சு தொடர்ந்து மிக நெருக்கமாகக் கண்காணித்து வருவதுடன், அவ்வப்போது புதிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் தயாராக உள்ளது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்