பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங், அவரது மனைவி பெட்டி சூ, மற்றும் தொழிலதிபர் பாங் லி கூன் ஆகியோர் தாக்கல் செய்த ஊழல் வழக்கு ரத்து மனு மீதான தீர்ப்பை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
11.6 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வெளிநாட்டுத் தொழிலாளர் விடுதித் திட்டத்தில் முறைகேடு செய்ததாக இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்யக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
2018-இல் லிம் குவான் எங் விடுவிக்கப்பட்ட, பங்களா வாங்குதல் தொடர்பான பழைய வழக்கின் ஆதாரங்களை இந்த வழக்கிலும் அரசுத் தரப்பு பயன்படுத்துவதாக தற்காப்பு தரப்பு வாதிட்டது.
இருப்பினும், இவை புதிய உண்மைகளின் அடிப்படையில் தொடரப்பட்ட தனித்தனி வழக்குகள் என அரசுத் தரப்பு வாதிட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி டத்தோ அஸ்மான் அப்துல்லா தலைமையிலான நீதிபதிகள் குழு, அமர்வு, தீர்ப்பு தேதியை முடிவு செய்ய ஏப்ரல் 27-ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது.








