Jun 6, 2026
Thisaigal NewsYouTube
சங்காட் பகுதியில் அதிரடி சோதனை: 152 வெளிநாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

சங்காட் பகுதியில் அதிரடி சோதனை: 152 வெளிநாட்டவர்கள் கைது

Share:

கோலாலம்பூர் சங்காட் பகுதியில் உள்ள மூன்று நட்சத்திர தங்கும்விடுதியை மையமாகக் கொண்டு செயல்பட்டதாகக் கூறப்படும் விபச்சார கும்பலை முறியடித்த மலேசிய குடிநுழைவுத்துறை அதிகாரிகள், 152 வெளிநாட்டவர்களை கைது செய்துள்ளனர்.

பொதுமக்களின் புகார்கள் மற்றும் இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவுத்துறை கண்காணிப்பின் அடிப்படையில், நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது.

புத்ராஜெயா தலைமையக அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த 131 குடிநுழைவுத்துறை அதிகாரிகளும், நான்கு சுங்கத்துறை அதிகாரிகளும் இணைந்து, அந்த தங்கும் விடுதி மற்றும் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பொழுதுபோக்கு மையத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 243 பேர் சோதனை செய்யப்பட்டனர். அவர்களில் 194 பேர் வெளிநாட்டவர்களும், 49 பேர் மலேசியர்களும் ஆவர்.

இந்நிலையில், அவர்களில் 152 பேர் முறையான ஆவணங்கள் இல்லாத நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்