அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கப்படுவதை ஒத்திவைத்துள்ள மனித வள அமைச்சு, புதிய தொழிலாளர்கள் எடுப்பதற்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாக, தற்போது கொண்டு வரப்பட்டுள்ள அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கைப் போதுமான அளவில் உள்ளதா? என்பது குறித்து மீளாய்வு செய்யவிருப்பதாக அதன் அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
அந்நியத் தொழிலாளர்கள் தருவிப்பது மீதான தளர்வு திட்டத்தின் கீழ் புதிய தொழிலாளர்களைத் தருவிக்கும் திட்டத்தை மனித வள அமைச்சு கடந்த மார்ச் 18 ஆம் தேதி முதல் காலவரையின்றி ஒத்திவைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கப்படுவது தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்த போதிலும் அந்த அனுமதியை அரசாங்கம் விருப்பம் போல் வழங்கிவிட முடியாது என்று சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


