அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கப்படுவதை ஒத்திவைத்துள்ள மனித வள அமைச்சு, புதிய தொழிலாளர்கள் எடுப்பதற்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாக, தற்போது கொண்டு வரப்பட்டுள்ள அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கைப் போதுமான அளவில் உள்ளதா? என்பது குறித்து மீளாய்வு செய்யவிருப்பதாக அதன் அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
அந்நியத் தொழிலாளர்கள் தருவிப்பது மீதான தளர்வு திட்டத்தின் கீழ் புதிய தொழிலாளர்களைத் தருவிக்கும் திட்டத்தை மனித வள அமைச்சு கடந்த மார்ச் 18 ஆம் தேதி முதல் காலவரையின்றி ஒத்திவைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கப்படுவது தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்த போதிலும் அந்த அனுமதியை அரசாங்கம் விருப்பம் போல் வழங்கிவிட முடியாது என்று சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


