Jul 31, 2026
Thisaigal NewsYouTube
அடுத்தப் பொதுத் தேர்தல் வரை காத்திருங்கள்!
தற்போதைய செய்திகள்

அடுத்தப் பொதுத் தேர்தல் வரை காத்திருங்கள்!

Share:

ஓராண்டுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஒற்றுமை அரசாங்கம் அடுத்தப் பொதுத் தேர்தல் வரை நீடிக்கும் என்று அமானா கட்சித் தலைவர் முகமட் சாபு நம்பிக்கை தெரிவித்தார்.

ஒரு வேளை அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்றால் அடுத்தப் பொதுத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்றார் அவர்.

கடந்த 2018 பொதுத் தேர்தலில் அமைக்கப்பட்ட நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை 2020இல் முன்னெடுக்கப்பட்ட ஷெரட்டன் நகர்வு மூலம் கவிழ்க்கு முயறியையும் இன்னோர் அரசியல் சுனாமியையும் இந்த நாடு தாங்காது.

அந்த மாற்றத்தால் முதலில் முகைதீன் யாசின் பிரதமர் ஆனார். அதுவும் முறையாக நிலைக்காமல் இஸ்மாயில் சப்ரி பிரதமர் ஆனார். இந்த அரசியல் பேரிடர் மீண்டும் மலேசியாவில் நடக்க வேண்டாம்.

ஆக, அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்றால் பொதுத் தேர்தலின் வாயிலாக மாற்ற வேண்டும் என முகம்மட் சாபு குறிப்பிட்டார்.

Related News