Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மகளை 8 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் புரிந்த தந்தைக்கு 20 ஆண்டு சிறை 5 பிரம்படித் தண்டனை
தற்போதைய செய்திகள்

மகளை 8 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் புரிந்த தந்தைக்கு 20 ஆண்டு சிறை 5 பிரம்படித் தண்டனை

Share:

போர்ட்டிக்சன் வட்டாரத்தில் தனது சொந்த மகளை 12 வயதிலிருந்து 20 வயது வரையில் பாலியல் பலாத்காரம் புரிந்து வந்த தந்தை ஒருவருக்கு சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 20 ஆண்டு சிறை மற்றும் 5 பிரம்படித் தண்டனை விதித்தது.

44 வயதுடைய தனது சொந்த தந்தையின் இந்த வக்கிர செயலினால், இரண்டு பிள்ளைகளை பிரசவித்து, மனப்பாதிப்புக்கு ஆளாகியுள்ள 20 வயது பெண்ணுக்கு நேர்ந்த துயரத்திற்கு காரணமான அந்நபருக்கு நீதிமன்றம் இன்று கடும் தண்டனையை விதித்துள்ளது.

சிறுவயது முதல் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து வெளியில் செல்ல முடியாமலும், போலீசில் புகார் செய்ய இயலாமலும் பரிதவித்து வந்த அந்த இளம் பெண், போதைப்பொருள் வழக்கு தொடர்பாக தனது தந்தையும், தாயாரும் வீட்டில் கைது செய்யப்பட்ட போது, தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை போலீசுக்கு தெரிவித்ததைத் தொடர்ந்து இவ்விவகாரம் அம்பலத்திற்கு வந்தது.

அந்த இளம் பெண் பிரசவித்த இரண்டு குழந்தைகளில் ஒன்று இறந்து விட்ட நிலையில் மற்றொரு குழந்தையை தனக்கு தெரியாமலேயே தனது பெற்றோர் மற்றவரிடம் கொடுத்து விட்டதாக தனது போலீஸ் புகாரில் அப்பெண் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபரின் இந்த ஒழுக்கக்கேடான செயலை கடுமையாக கண்டித்த செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி Kamil Nizam, பிள்ளைகளை நன்கு பாதுகாத்து பொறுப்புடன் வளர்க்க வேண்டிய ஒரு தந்தை, எதிர்மாறாக நடந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாத கடும் குற்றமாகும் என்றார்.

தற்போது உறவுக்காரர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள அந்த இளம் பெண்ணுக்கு தேவையான பராமாரிப்புகளை வழங்குவதற்கு சமூக நல இலாகா முனைந்துள்ள நிலையில் அந்தப் பெண்ணின் தந்தையும், 45 வயது தாயாராரும் போதைப்பொருள் வைத்திருந்ததாக இன்று மற்றொரு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து