டிஏபியுடன் ஒத்துழைக்க தனது அதிருப்தியை இன்றிரவு அம்னோ உச்சமன்ற கூட்டத்தில் தெரிவிக்குமாறு Iஇஷாம் ஜாலிலுக்கு சவால் விடுத்தார் சாஹிட் ஹமிடி.
கெமாமன் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலாய்க்காரர்களால் அக்கட்சி நிராகரிக்கப்பட்டதற்கு அம்னோ - டிஏபி கூட்டணி காரணம் என ஒரு சில அம்னோ தலைவர்கள் கூறி இருப்பதாகத் தெரிவித்த இஷாம், சந்திப்புக் கூட்டத்தில் துணிச்சலாக முன்வந்து தெரிவிக்க வேண்டும். தமக்கு மாற்றுக் கருத்து இருப்பின், அதனையும் அங்கு வந்து தெரிவிக்க வேண்டும் என்றார் சாஹிட்.
ஆகக் கடைசியாக நடந்த 3 கூட்டங்களுக்கும் இஷாம் வராமல் இருந்ததை ஸாஹிட் சுட்டிக் காட்டினார்.








