மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட மாது ஒருவர், குளவிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் பினாங்கு, புக்கிட் கம்பீர் பகுதியில் நிகழ்ந்தது. குளவிகளால் தாக்கப்பட்டு கடும் பாதிப்புக்கு ஆளான 58 வயதுடைய அந்த மாதுவை பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது அவர் மரணமுற்றதாக பினாங்கு, திமூர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் வி. சரவணன் தெரிவித்தார்.
அந்த மாது குளவிகளால் தாக்கப்பட்டு மரணமுற்றதை மருத்துவர்கள் உறுதி செய்த வேளையில் தடயவியல் சோதனைக்காக சடலம் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக சரவணன் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது


