மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட மாது ஒருவர், குளவிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் பினாங்கு, புக்கிட் கம்பீர் பகுதியில் நிகழ்ந்தது. குளவிகளால் தாக்கப்பட்டு கடும் பாதிப்புக்கு ஆளான 58 வயதுடைய அந்த மாதுவை பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது அவர் மரணமுற்றதாக பினாங்கு, திமூர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் வி. சரவணன் தெரிவித்தார்.
அந்த மாது குளவிகளால் தாக்கப்பட்டு மரணமுற்றதை மருத்துவர்கள் உறுதி செய்த வேளையில் தடயவியல் சோதனைக்காக சடலம் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக சரவணன் குறிப்பிட்டார்.

Related News

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

ஆபாசச் சேட்டை: மூன்று மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்


