Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இஸ்லாம் அல்லாத சமய விவகாரங்களுக்கான அமைச்சை உருவாக்க சட்டத்தில் இடம் உண்டு – வழக்கறிஞர் Bastian Pius Vendargon பேச்சு

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.16-

இஸ்லாம் அல்லாத சமய விவகாரங்களைக் கவனிப்பதற்காக ஓர் அமைச்சகத்தை நிறுவுவதை மலேசிய அரசியலமைப்புச் சட்டம் தடை செய்யவில்லை என்று அரசியலமைப்பு வழக்கறிஞர் Bastian Pius Vendargon கூறினார். அரசியலமைப்பின்படி, இஸ்லாம் மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமயமாக இருந்தாலும், மற்ற சமயங்களும் சுதந்திரமாக கடைபிடிக்கப்படலாம் எனச் சுட்டிக் காட்டினார் அவர்.

முன்னதாக, இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும் என்ற ரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் சௌ யூ ஹுயின் கோரிக்கைக்கு PAS , MMLA என்ற அமைப்பு ஆகியன எதிர்ப்பு தெரிவித்ததற்குப் பதிலளிக்கும் வகையில் Bastian Pius Vendargon இவ்வாறு கூறினார். இந்த எதிர்மறை கருத்தானது 'சட்டப்பூர்வமாக இல்லாமல் அரசியல் அடிப்படையிலேயே இருப்பதாக Bastian Pius Vendargon கூறினார்.

சில வழக்கறிஞர்கள் இஸ்லாம், இஸ்லாம் அல்லாத சமயங்களின் உரிமைகள் தொடர்பான அரசியலமைப்பு விதிகளையும் நீதிமன்ற தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டி, இந்த விவகாரத்தில் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். இஸ்லாம் அல்லாத சமய விவகாரங்கள் ஏற்கனவே தேசிய ஒற்றுமை அமைச்சரின் அதிகார வரம்பிற்குள் இருப்பதாகவும், மத நல்லிணக்கக் குழு போதுமானது என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்