Apr 28, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் லாரி விபத்து: இரண்டு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பலி
தற்போதைய செய்திகள்

ஜோகூர் லாரி விபத்து: இரண்டு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பலி

Share:

இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், இரண்டு வெளிநாட்டு லாரி உதவியாளர்கள் உயிரிழந்தனர். ஜோகூர் பாரு-பத்து பகாட் சாலையில் நேற்று மதியம் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்புடைய லாரி, கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த லாரி மீது மோதியதே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பொந்தியான் போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரைத் தடுத்து வைத்துள்ள போலீசார், சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related News