தங்காக், பிளஸ் நெடுஞ்சாலை கிலோ மீட்டர் 164.8இல் அமைந்துள்ள ஓய்வெடுக்கும் நிலையத்திற்குச் செல்லும் வழியில் 3 லாரிகள் விபத்துக்குள்ளாகின. அதில் இரு ஆடவர்கள் உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அளித்த தங்காக் தீயணைப்பு - மீட்புப் படையின் மூத அதிகாரி சம்ரி அயோப் தெரிவிக்கயில், இன்று அதிகாலை 4.26 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அந்த விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலத்தை அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது எனக் கூறினார்.








