முதியவர் ஒருவரை கொலை செய்ததாக காதல் ஜோடிக்கு எதிராக மலாக்கா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 24 வயது முஹம்மாட் ராரிஸ் அஹ்மாட் ஜமாலுடின் அவரின் காதலியான 34 வயது நூர்பைசுரா முஹமட் ஃபுஅட் என்ற அந்த காதல் ஜோடி, மாஜிஸ்திரேட் மசானா சினின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இவ்விருவரும் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 7 மணியளவில் மலாக்கா, ஆயர் குரோ, ஜாலான் கபாம் என்ற இடத்தில் 71 வயது தான் கியு செங் என்பவருக்கு மரணம் விளைவித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த காதல் ஜோடி குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


