May 24, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளானில் நீர்ப்பெருக்கு கட்டுப்பாட்டில் உள்ளது
தற்போதைய செய்திகள்

கிள்ளானில் நீர்ப்பெருக்கு கட்டுப்பாட்டில் உள்ளது

Share:

கிள்ளான்,செப்டம்பர் 20-

கிள்ளான் வட்டாரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய பெரியளவிலான நீர்ப்பெருக்கு நிகழ்வானது, இன்று வெள்ளிக்கிழமையுடன் நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், நடப்பு சூழல் தொடர்ந்து கட்டுப்பாட்டில் உள்ளது என்று கிள்ளான் மாவட்ட அதிகாரிஅம்ரி இஸ்மாயில் தெரிவித்தார்.

இதுவரையில் நிவாரண மையங்களுக்கு மக்கள் இடமாற்றம் செய்வது போன்ற எந்தவொரு நடவடிக்கையும் நடைபெறவில்லை. நீரின் மட்டம் 5.8 மீட்டர் உயரம் மேலோங்கிய போதிலும் வெப்பத் திவளை பதிவு 15 ஆக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை வடிக்கால், நீர்ப்பாசன இலாகா தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related News