Mar 30, 2026
Thisaigal NewsYouTube
பூர்வாங்க ஆட்சேப மனுவை தாக்கல் செய்தார் தனித்து வாழும் தாயார்
தற்போதைய செய்திகள்

பூர்வாங்க ஆட்சேப மனுவை தாக்கல் செய்தார் தனித்து வாழும் தாயார்

Share:

புத்ராஜெயா, நவ.5-


தனது மூன்று பிள்ளைகள் தன்னிச்சையாக மதம் மாற்றப்பட்டது செல்லாது என்று அறிவித்து இருக்கும் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து சவால் விடுத்துள்ள பெர்லிஸ் மாநில அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு தனித்து வாழும் தாயாரான லோ சியூவ் ஹோங் பூர்வாங்க ஆட்சேப மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த ஆட்சேப அப்பிடெவிட் மனு, இன்று காலையில் புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

லோ சியூவ் ஹோங் சார்பில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் குழுவில் இடம் பெற்றுள்ள வழக்கறிஞர் குணமலர் கோவிந்தராஜு, இதனை உறுதி செய்துள்ளார்.

அந்த மூன்று பிள்ளைகள் மதம்மாற்றப்பட்டது செல்லாது என்று அறிவித்து இருக்கும் கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி பெர்லிஸ் மாநில அரசாங்கம் விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே லோ சியூவ் ஹோங் சார்பில் இந்த ஆட்சேப ஆட்சேப மனுவை தாங்கள், தாக்கல் செய்துள்ளதாக குணமலர் விளக்கினார்.

Related News

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது