ஜோகூர்பாரு, நவ. 21-
ஜோகூர் மாநில அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாத போனஸ் தொகை வழங்கப்படுவதாக மாநில மந்திரி பெசார் ஓன் ஹபிஸ் காஸி இன்று அறிவித்தார்.
ஜோகூர் மாநில அரசு ஊழியர்களின் கடும் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை கருத்தில் கொண்டு அவர்களை பாராட்டும் விதமாக இரண்டு மாத போனஸ் அறிவிக்கப்படுவதாக மந்திரி பெசார் குறிப்பிட்டார்.
இன்று ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் மாநிலத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகையில் ஓன் ஹபிஸ் காஸி இதனை தெரிவித்தார்.








