ஈப்போ,ஜூலை 13-
MITRA - இந்திய சமூக உருமாற்று பிரிவின் சமூகபொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் மூலம் கடந்தாண்டு ஏறத்தாழ ஒரு லட்சத்து 35 ஆயிரம் இந்தியர்கள், குறிப்பாக B40 பிரிவை சேர்ந்தவர்கள் பயனடைந்துள்ளனர்.
MITRA-வின் கீழ் வழங்கப்பட்ட இருநூற்று 16 திட்டங்களுக்கு என 10 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கடந்த மாதம் 24-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் படு கஜா உறுப்பினர்
வி.சிவக்குமார் எழுப்பிய கேள்விக்கு, டத்தோ ஸ்ரீ அன்வார் எழுத்துப்பூர்வ வடிவில் அவ்வாறு பதிலளித்தார்.








