Dec 3, 2025
Thisaigal NewsYouTube
போலீசாருக்கு 7,000 ரிங்கிட் லஞ்சம் கொடுக்க முயன்ற வங்கதேச ஆடவர் கைது!
தற்போதைய செய்திகள்

போலீசாருக்கு 7,000 ரிங்கிட் லஞ்சம் கொடுக்க முயன்ற வங்கதேச ஆடவர் கைது!

Share:

கிள்ளான், செப்டம்பர்.25-

பூலாவ் இண்டா இண்டஸ்ட்ரியல் பார்க் அருகே இன்று போலீஸ் சோதனையின் போது, 7000 ரிங்கிட் லஞ்சமாக வழங்குவதாகக் கூறிய வங்கதேச ஆடவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

குடியிருப்புப் பகுதி ஒன்றில் ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகளுடன் கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த அந்த ஆடவரைப் போலீசார் நிறுத்திய போது தப்பிச் செல்ல முயன்றதாக நம்பப்படுகின்றது.

இந்நிலையில், அக்காரை மடக்கிப் பிடித்த போலீசார், அதில் சோதனையிட்ட போது, அந்த ஆடவர் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகின்றது.

எனினும், விசாரணையில், அவரது காரில் இருந்த இருவருக்கு முறையான ஆவணங்கள் இல்லை என்பது தெரிய வந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் வெளிநாட்டினர் பலர் முறையான ஆவணங்கள் இன்றி சுற்றித் திரிவதாகவும், மளிகைக் கடை நடத்துவதாகவும் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்