ஜோகூர், கோத்தா திங்கியில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக, 71 வயது முதியவர் ஒருவருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
லிம் லியான் என்ற அந்த முதியவர் மூவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
61 மற்றும் 64 வயதுடைய இரு உள்ளூர் நபர்களையும், 37 வயது வெளிநாட்டுப் பெண்ணையும் கொலை செய்ததாக அந்த முதிவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மெண்டரின் மொழியில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கேட்ட முதியவர், அதனைப் புரிந்து கொண்டதாகத் தலையசைத்தார்.
கொலை வழக்கு என்பதால் பிணை மறுக்கப்பட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








