மலேசிய கடற்பகுதியில் நங்கூரமிடுவதற்கு முயற்சி மேற்கொண்ட இஸ்ரேலை தளமாக கொண்ட கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ZIM என்ற அந்த இஸ்ரேலிய கப்பல், மலேசிய கடற்பகுதியில் நங்கூரமிடுவதற்கு திட்டம் கொண்டுள்ளதாக அறியப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே போக்குவரத்து அமைச்சின் துரித நடவடிக்கையின் மூலம் அந்த இஸ்ரேலிய கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அதேவேளையில் இப்போது முதல் அடுத்த நான்கு வார காலத்திற்கு அந்தக் கப்பல் மலேசிய கடப்பகுதிக்குள் நுழைவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் விளக்கினார்.
அனைத்துலக சட்டவிதிமுறைகளை மீறி மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டின் கப்பலுக்கு மலேசிய எல்லையில் இடம் அளிக்க மறுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.








