சபா, ஜூன் 18-
ஹஜ்ஜுப் பெருநாளுக்காக குர்பான் கொடுப்பதற்கு மரத்தடியில் கட்டப்பட்டு இருந்த எருமை ஒன்று, கட்டவிழ்த்துக்கொண்டு, சீறிப்பாய்ந்து ஓடியதில் மாது ஒருவரை முட்டி படுகாயத்தை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் சபா, கோத்தாகினபாலு, மங்காத்தல், கம்போங் ரம்பாயான் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
அந்த எருமை, பின்புறமாக முட்டியதில் 40 வயது மாதுவிற்கு இடுப்புக்கு கீழே இடது கால் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த மாது உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டுள்ளார்.








