Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பிடிபிடிஎன் கடனைத் திரும்பச் செலுத்தினால் கட்டணக் கழிவு கொடுக்கப்படாது - உயர்க்கல்வி அமைச்சு
தற்போதைய செய்திகள்

பிடிபிடிஎன் கடனைத் திரும்பச் செலுத்தினால் கட்டணக் கழிவு கொடுக்கப்படாது - உயர்க்கல்வி அமைச்சு

Share:

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட அறிக்கையில், பிடிபிடிஎன் கடனைத் திரும்பச் செலுத்துபவர்களுக்குக் கட்டணக் கழிவு கொடுப்பது இனி தொடரப்படாது என உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ செரி முஹமாட் காலெட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும், அதன் இறுதி முடிவு நிதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

2023 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை பிடிபிடிஎன் கடனைத் திரும்பச் செலுத்துகிறவர்களுக்கு 20 விழுக்காடு வரை கட்டணக் கழிசு வங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டிய அவர், ஆயிரத்து 800 வெள்ளிக்கும் குறைந்த வருமானம் பெறுகிறவர்களுக்கு 6 மாதங்கள் வரை கடனைத் திரும்பச் செலுத்தும் கால அவகாசம் ஒத்தி வைக்கப்படும் சிறப்பு சலுகையும் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால், 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட அறிக்கையில் இலக்கிவியலாக்கல், புத்தாக்கம், மாணவர்களின் தங்குமிட வசதி ஆகிய மூன்று மிக்கிய விவகாரங்களில் உயர்க்கல்வி அமைச்சு கவனம் செலுத்த இருப்பதாக அமைச்சர் மேலும் சொன்னார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து