Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கைப்பேசி விவகாரம்: ஐஜிபி தெளிவுப்படுத்த வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜன. 18-


குற்றம் நடந்து இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் ஒரு நபரின் கைப்பேசியை போலீஸ் துறை அபகரிக்க முடியும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் கூறியிருப்பது தொடர்பில் அது குறித்து ஐஜிபி தெளிவுபடுத்த வேண்டும் என்று மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐஜிபியின் இந்த அறிவிப்பு கவலையை அளிக்கிறது என்று சுஹாகாம் கூறுகிறது.

சாலைத்தடுப்பு சோதனைகளில் போலீசாரால் பரிசோதனைக்கு ஆளாகும் ஒரு வாகனமோட்டியின் கைப்பேசியை போலீசார் தன்னிச்சையாக பறிமுதல் செய்து, சோதனை செய்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று அந்த ஆணையம் கூறுகிறது.

குறிப்பாக, போலீஸ்துறையினரால் தடுக்கப்பட்டாலோ, விசாரிக்கப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ பொது மக்கள் தங்களுக்கான அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வை கொண்டு இருக்க வேண்டும் என்பதே சுஹகாமின் வாதமாகும்.

இந்நிலையில் ஒருவரின் கைப்பேசியை பறிப்பதும், அதனை சோதனையிடுவதும் எத்தகைய சூழலில் மட்டுமே முடியும் என்பதை பொது மக்களுக்கு போலீஸ் படைத் தலைவர் தெளிவுப்படுத்த வேண்டும் என்று சுஹாகாம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி