எதிர்வரும் 16-வது ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதாக பார்ட்டி பெர்சாமா மலேசியா கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சித் தலைவர்களான, முன்னாள் அமைச்சர்கள் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அகமத் ஆகியோர் இன்று புதன்கிழமை வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இத்தகவலை உறுதிப்படுத்தினர்.
அதேவேளையில், ஜோகூர் மாநிலத்தில் பெர்சாமா போட்டியிடவுள்ள தொகுதிகள் குறித்து கட்சியின் மாநில பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த ஆலோசனைக் கூட்டமானது இன்று புதன்கிழமை நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் உள்ள கட்சி தலைவர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே, இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெர்சாமா கட்சியின் இந்த அறிவிப்பு, ஜோகூர் மாநில அரசியலில் புதிய போட்டி நிலையை உருவாக்கும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.








