தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப் ரொக்க நிதிப்புழக்க நெறுக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுவதை அந்த வாரியம் இன்று மறுத்துள்ளது.
அதே வேளையில், பணி ஓய்வுப் பெறுகின்றவர்கள் தங்கள் சேமிப்பை மீட்பதற்குத் தடை விதிக்கும் வகையில் 1991 ஆம் ஆண்டு இபிஎப் சட்டத்தில் திருத்தம் செய்யவிருப்பதாக கூறப்படுவதையும் அந்த வாரியம் வன்மையாக மறுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்தத் தகவலில் உண்மை இல்லை என்று அந்த வாரியம் விளக்கமளித்துள்ளது.
தொழிலாளர்களின் அந்திமக்கால நலனை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட இபிஎப், தனது கடப்பாட்டை நிறைவு செய்யும் வகையில் எப்போதுமே போதுமான ரொக்க நிதிப்புழக்கத்தைக் கொண்டுள்ளதாக அந்த வாரியம் தெளிவுப்படுத்தியுள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


