Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சிப்பாங்கில் ஆசிரியர் ஒருவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்

Share:

சிப்பாங், மார்ச்.01-

சிலாங்கூர், டிங்கிலில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் 12 வயது மாணவியுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறப்படும் 30 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தனது மகளுக்கும், அந்த ஆசிரியருக்கும் இடையிலான உறவு, ஆசிரியர் – மாணவி என்ற நிலைமாறி, சந்தேகத்திற்கு இடமாக இருப்பதாக அந்த மாணவியின் தந்தை செய்து கொண்ட புகாரின் அடிப்படையில் இவ்விவகாரம் விசாரணை செய்யப்பட்டு வருவதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்துள்ளார்.

தனது மகள் டிக் டாக், லவ் 8 மற்றும் வாட்ஸ்ஆப் ஆகிய செயலிகளைப் பயன்படுத்தி, அந்த ஆசிரியருடன் ரகசிய தொடர்பை கொண்டுள்ளதாக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அந்த சிறுமியின் தந்தை போலீல் புகார் செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த ஆசிரியர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. எனினும் அவருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருவதாக ஏசிபி நோர்ஹிஸாம் தெரிவித்தார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு