நெகிரி செம்பிலான் மாநில ஒற்றுமை அரசாங்கத்திற்கு அம்னோவின் 14 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் முழு ஆதரவைத் தொடர்ந்து வழங்குவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி உறுதிப்படுத்தியுள்ளார்.
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருணுக்கு வழங்கிய ஆதரவை அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொள்ளப்போவதாக எழுந்த தகவலைத் தொடர்ந்து, இன்று அவர்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு துணைப்பிரதமராக ஜாஹிட் இவ்விவரத்தை வெளியிட்டுள்ளார்.








