Dec 3, 2025
Thisaigal NewsYouTube
முதியவரின் இல்லத்தில் நுழைந்து கொள்ளை
தற்போதைய செய்திகள்

முதியவரின் இல்லத்தில் நுழைந்து கொள்ளை

Share:

முதியவர் ஒருவரின் வீட்டில் நுழைந்த 4 முகமூடி கொள்ளையர்கள், அவரின் கழுத்தில் பாராங்கை வைத்து, அச்சுறுத்தி 20 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 4:15 மணியளவில் நெகிரி செம்பிலான், ஜெம்போல், ஃபெல்டா பலுங் எனாம் நிலக்குடியேற்றப்பகுதியில் நிகழ்ந்தது. மிகுந்த பதற்றத்திற்கு ஆளான அந்த முதியவர் கூச்சலிட்டால் கொன்றுவிடுவேன் என்று அச்சுறுத்தி அந்த 4 கொள்ளையர்களும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் என்று ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர்ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.

வீட்டின் பின்புறத்திலிருந்து நுழைந்த 30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 4 கொள்ளையர்கள் இந்தோனேசியர்கள் என்று நம்பப்படுகிறது.

Related News