முதியவர் ஒருவரின் வீட்டில் நுழைந்த 4 முகமூடி கொள்ளையர்கள், அவரின் கழுத்தில் பாராங்கை வைத்து, அச்சுறுத்தி 20 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 4:15 மணியளவில் நெகிரி செம்பிலான், ஜெம்போல், ஃபெல்டா பலுங் எனாம் நிலக்குடியேற்றப்பகுதியில் நிகழ்ந்தது. மிகுந்த பதற்றத்திற்கு ஆளான அந்த முதியவர் கூச்சலிட்டால் கொன்றுவிடுவேன் என்று அச்சுறுத்தி அந்த 4 கொள்ளையர்களும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் என்று ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர்ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
வீட்டின் பின்புறத்திலிருந்து நுழைந்த 30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 4 கொள்ளையர்கள் இந்தோனேசியர்கள் என்று நம்பப்படுகிறது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


