முதியவர் ஒருவரின் வீட்டில் நுழைந்த 4 முகமூடி கொள்ளையர்கள், அவரின் கழுத்தில் பாராங்கை வைத்து, அச்சுறுத்தி 20 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 4:15 மணியளவில் நெகிரி செம்பிலான், ஜெம்போல், ஃபெல்டா பலுங் எனாம் நிலக்குடியேற்றப்பகுதியில் நிகழ்ந்தது. மிகுந்த பதற்றத்திற்கு ஆளான அந்த முதியவர் கூச்சலிட்டால் கொன்றுவிடுவேன் என்று அச்சுறுத்தி அந்த 4 கொள்ளையர்களும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் என்று ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர்ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
வீட்டின் பின்புறத்திலிருந்து நுழைந்த 30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 4 கொள்ளையர்கள் இந்தோனேசியர்கள் என்று நம்பப்படுகிறது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


