சட்டவிரோத குடியேறிகளுக்கான மறுகட்டமைப்பு பதிவுத் திட்டத்தில் வேலை பெர்மிட் பெற்று தருவது மற்றும் புதுப்பிப்பது ஆகிய பணிகளுக்கு தாம் ஏஜெண்டாக செயல்படுவதாக கூறி மோசடி வேலைகளை புரிந்து வந்ததாக நம்பப்படும் வங்காளதேச ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, ஜோகூர், தம்போய் வட்டாரத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் அந்த வங்காளதேசி பிடிபட்டதாக மாநில குடிநுழைவு இயக்குநர் பஹாருடின் தாஹிர் தெரிவித்தார்.








