Mar 10, 2026
Thisaigal NewsYouTube
டத்தோஸ்ரீ சரவணனுக்கு இலை போடப்பட்டப் பின்னரே மற்றவர்களுக்கு சாப்பாடு போடப்பட்டதா?
தற்போதைய செய்திகள்

டத்தோஸ்ரீ சரவணனுக்கு இலை போடப்பட்டப் பின்னரே மற்றவர்களுக்கு சாப்பாடு போடப்பட்டதா?

Share:

குற்றச்சாட்டை மறுத்தனர் நகரத்தார்கள்

கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, இரண்டரை மைலில் உள்ள நகரத்தார்களின் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று நடைபெற்ற அன்னதான நிகழ்வில் மஇகா தேசிய துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ எம். சரவணனுக்கு இலைப்போட்டப் பின்னரே பக்தர்களுக்கு அன்னதானம் பரிமாறப்பட்டதாக கூறப்படுவதை அந்த ஆலயத்தைச் சேர்ந்த செட்டியார் சமூகம் மறுத்துள்ளது.

மகேஸ்வர பூஜைக்கு பின்னர், அன்னதான மண்டபத்தில் பக்தர்கள் பெரும் திரளாக அமர்ந்துவிட்ட நிலையில், பிற்பகல் 1.45 மணி வரையில் அன்னதானம் வழங்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பசியோடு காத்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சரவணன், அன்னதான மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவருக்கு இலைப் போட்டப் பின்னரே, பல மணி நேரம் காத்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாக, பக்தர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் தமது ஆதங்கத்தைப் பகிர்ந்திருப்பது, மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், சரவணன் வருவதற்கும், அன்னதானம் ஆரம்பிக்கப்பட்டதும் எதிர்பாராத சம்பவமாகும். முன்னாள் அமைச்சர் வருகிறார் என்பதற்காக செட்டியார்கள் மரியாதை நிமித்தமாக அவரை அழைத்துச் சென்று சாப்பாட்டு இருக்கையில் அமர வைத்தனர். ஆனால், சரவணனுக்கு இலைப் போட்ட பின்னரே மற்றவர்களுக்கு சாப்பாடு போடப்பட்டது என்பது உண்மையில்லை என்று செட்டியார் சமூகம் வாதிட்டுள்ளனர்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து