Jan 19, 2026
Thisaigal NewsYouTube
டத்தோஸ்ரீ சரவணனுக்கு இலை போடப்பட்டப் பின்னரே மற்றவர்களுக்கு சாப்பாடு போடப்பட்டதா?
தற்போதைய செய்திகள்

டத்தோஸ்ரீ சரவணனுக்கு இலை போடப்பட்டப் பின்னரே மற்றவர்களுக்கு சாப்பாடு போடப்பட்டதா?

Share:

குற்றச்சாட்டை மறுத்தனர் நகரத்தார்கள்

கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, இரண்டரை மைலில் உள்ள நகரத்தார்களின் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று நடைபெற்ற அன்னதான நிகழ்வில் மஇகா தேசிய துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ எம். சரவணனுக்கு இலைப்போட்டப் பின்னரே பக்தர்களுக்கு அன்னதானம் பரிமாறப்பட்டதாக கூறப்படுவதை அந்த ஆலயத்தைச் சேர்ந்த செட்டியார் சமூகம் மறுத்துள்ளது.

மகேஸ்வர பூஜைக்கு பின்னர், அன்னதான மண்டபத்தில் பக்தர்கள் பெரும் திரளாக அமர்ந்துவிட்ட நிலையில், பிற்பகல் 1.45 மணி வரையில் அன்னதானம் வழங்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பசியோடு காத்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சரவணன், அன்னதான மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவருக்கு இலைப் போட்டப் பின்னரே, பல மணி நேரம் காத்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாக, பக்தர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் தமது ஆதங்கத்தைப் பகிர்ந்திருப்பது, மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், சரவணன் வருவதற்கும், அன்னதானம் ஆரம்பிக்கப்பட்டதும் எதிர்பாராத சம்பவமாகும். முன்னாள் அமைச்சர் வருகிறார் என்பதற்காக செட்டியார்கள் மரியாதை நிமித்தமாக அவரை அழைத்துச் சென்று சாப்பாட்டு இருக்கையில் அமர வைத்தனர். ஆனால், சரவணனுக்கு இலைப் போட்ட பின்னரே மற்றவர்களுக்கு சாப்பாடு போடப்பட்டது என்பது உண்மையில்லை என்று செட்டியார் சமூகம் வாதிட்டுள்ளனர்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!