Dec 2, 2025
Thisaigal NewsYouTube
டத்தோஸ்ரீ சரவணனுக்கு இலை போடப்பட்டப் பின்னரே மற்றவர்களுக்கு சாப்பாடு போடப்பட்டதா?
தற்போதைய செய்திகள்

டத்தோஸ்ரீ சரவணனுக்கு இலை போடப்பட்டப் பின்னரே மற்றவர்களுக்கு சாப்பாடு போடப்பட்டதா?

Share:

குற்றச்சாட்டை மறுத்தனர் நகரத்தார்கள்

கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, இரண்டரை மைலில் உள்ள நகரத்தார்களின் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று நடைபெற்ற அன்னதான நிகழ்வில் மஇகா தேசிய துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ எம். சரவணனுக்கு இலைப்போட்டப் பின்னரே பக்தர்களுக்கு அன்னதானம் பரிமாறப்பட்டதாக கூறப்படுவதை அந்த ஆலயத்தைச் சேர்ந்த செட்டியார் சமூகம் மறுத்துள்ளது.

மகேஸ்வர பூஜைக்கு பின்னர், அன்னதான மண்டபத்தில் பக்தர்கள் பெரும் திரளாக அமர்ந்துவிட்ட நிலையில், பிற்பகல் 1.45 மணி வரையில் அன்னதானம் வழங்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பசியோடு காத்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சரவணன், அன்னதான மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவருக்கு இலைப் போட்டப் பின்னரே, பல மணி நேரம் காத்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாக, பக்தர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் தமது ஆதங்கத்தைப் பகிர்ந்திருப்பது, மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், சரவணன் வருவதற்கும், அன்னதானம் ஆரம்பிக்கப்பட்டதும் எதிர்பாராத சம்பவமாகும். முன்னாள் அமைச்சர் வருகிறார் என்பதற்காக செட்டியார்கள் மரியாதை நிமித்தமாக அவரை அழைத்துச் சென்று சாப்பாட்டு இருக்கையில் அமர வைத்தனர். ஆனால், சரவணனுக்கு இலைப் போட்ட பின்னரே மற்றவர்களுக்கு சாப்பாடு போடப்பட்டது என்பது உண்மையில்லை என்று செட்டியார் சமூகம் வாதிட்டுள்ளனர்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்