Mar 31, 2026
Thisaigal NewsYouTube
போப்பாண்டவர் இறுதிச் சடங்கில் இரு அமைச்சர்கள் பங்கேற்பு
தற்போதைய செய்திகள்

போப்பாண்டவர் இறுதிச் சடங்கில் இரு அமைச்சர்கள் பங்கேற்பு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.25-

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும் உலகத் தலைவர்களும் லட்சக்கணக்கான மக்களும் வத்திகன் நகரில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் போப்பாண்டவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, மலேசியா சார்பாக அஞ்சலி செலுத்துவதற்கு பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் மற்றும் தொழில் முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஏவோன் பெனடிக் ஆகிய இரு அமைச்சர்கள் வத்திகன் நகருக்குப் பயணமாகினர்.

கத்தோலிக்கத் திருச்சபையின் 266-வது போப்பாண்டவராகவும், வத்திகன் நகரத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட போப்பாண்டவர் பிரான்சிஸ், உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி தனது 88 ஆவது வயதில் மரணமடைந்தார்.

போப்பாண்டவரின் உடல் ரோம் நகரின் வத்திகனில் அமைந்துள்ள செயிண்ட் பீட்டர்’ஸ் பசிலிகா கத்தோலிக்க தேவாலயத்தின் முன் வைக்கப்பட்டிருக்கிறது.

இறுதிச் சடங்கு நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது. அவரது உடல் வத்திகனில் இருக்கும் அவரது காசா சந்தா மார்த்தா மாளிகையில் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.

செயிண்ட் பீட்டர்’ஸ் பசிலிகா கத்தோலிக்க தேவாலயத்தில், கடந்த புதன்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை மூன்று நாட்கள் போப் பிரான்சிஸ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக 25 லட்சம் பொதுமக்கள் வரை வத்திகன் நகரில் குவிய நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறறது.

Related News

எஸ்ஆர்சி வழக்கு: 1.3 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க நஜீப்பிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

எஸ்ஆர்சி வழக்கு: 1.3 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க நஜீப்பிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கூலிம் தொழிற்சாலை அத்துமீறல்: டத்தோ கலைவாணர் மற்றும் ஊடகவியலாளர் காளிதாஸ் ஜாமீனில் விடுதலை

கூலிம் தொழிற்சாலை அத்துமீறல்: டத்தோ கலைவாணர் மற்றும் ஊடகவியலாளர் காளிதாஸ் ஜாமீனில் விடுதலை

டீசல் விலை உயர்வு: தொழிற்சாலை பேருந்து கட்டணம் 28% வரை அதிகரிக்கிறது

டீசல் விலை உயர்வு: தொழிற்சாலை பேருந்து கட்டணம் 28% வரை அதிகரிக்கிறது

அண்டை வீட்டாரைக் கொன்ற லாரி ஓட்டுநருக்கு 35 ஆண்டுகள் சிறை மற்றும் 12 பிரம்படிகள்

அண்டை வீட்டாரைக் கொன்ற லாரி ஓட்டுநருக்கு 35 ஆண்டுகள் சிறை மற்றும் 12 பிரம்படிகள்

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு