May 21, 2026
Thisaigal NewsYouTube
மூளையாக இருந்து செயல்படுபவர்களை விசாரணை செய்வீர்
தற்போதைய செய்திகள்

மூளையாக இருந்து செயல்படுபவர்களை விசாரணை செய்வீர்

Share:

மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, அந்நிய நாட்டவர்களை தருவித்து, அவர்களை ஏமாற்றி வரும் மோசடிக்கும்பலின் பின்னணியில் இருந்து செயல்படும் நபர்களை அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டும் என்று மலேசிய தொழிற்சங்க காங்கிரஸான MTUC கோரிக்கை விடுத்துள்ளது.

மலேசியாவிற்கு வந்த பின்னர் வாக்குறுதி அளித்ததைத் போல் அவர்களுக்கு வேலை வாங்கித் தராமல் அவர்களை ஏளனப்படுத்தி, மனித கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று MTUC யின் பொதுச் செயலாளர் கமாருல் பஹாரின் மன்சூர் கேட்டுக்கொண்டார்.

அந்நியத் தொழிலாளர்கள் விவகாரத்தில் உரிய தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தவறுமானால் அடுத்த ஆண்டில் மனித கடத்தல் தொடர்பான அறிக்கையில் மலேசியா மூன்றாவது படிநிலையில் இடம் பெற்று விடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

Related News