வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ஜோகூர், யோங் பெங், ஆர்&ஆர் வாகன ஓய்வுத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் ஒன்றில் ஒரு பெண் உட்பட மூவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 8.50 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தீயணைப்பு, மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அதற்கு முன்னதாகவே பூட்டப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து, அந்த மூவரையும் பொது மக்கள் காரிலிருந்து வெளியேற்றியுள்ளனர் என்றும் பகோஹ் நிலையத்தின் கமாண்டர் சுஹைருலர் சரிப் தெரிவித்தார். எனினும் அந்த மூவரும் இறந்து விட்டனர் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மூவரின் சடலங்களும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
23 மற்றும் 25 வயதுடைய இரு ஆண்கள், 27 வயதுடைய ஒரு பெண் ஆகியோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இறந்ததற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கமாண்டர் சுஹைருலர் சரிப் தெரிவித்தார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


