Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஒரு பெண் உட்பட ​மூவர் காருக்குள் இறந்த கிடந்தனர்
தற்போதைய செய்திகள்

ஒரு பெண் உட்பட ​மூவர் காருக்குள் இறந்த கிடந்தனர்

Share:

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ஜோகூர், யோங் பெங், ஆர்&ஆர் வாகன ஓய்வுத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் ஒன்றில் ஒரு பெண் உட்பட ​மூவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 8.50 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ​தீயணைப்பு, ​மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அதற்கு முன்னதாகவே பூட்டப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து, அந்த ​மூவரையும் பொது மக்கள் காரிலிருந்து ​வெளியேற்றியுள்ளனர் என்றும் பகோஹ் நிலையத்தின் கமாண்டர் சுஹைருலர் சரிப் தெரிவித்தார். எனினும் அந்த மூவரும் இறந்து விட்டனர் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் ​மூவரின் சடலங்களும் போ​லீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
23 மற்றும் 25 வயதுடைய இரு ஆண்கள், 27 வயதுடைய ஒரு பெண் ஆகியோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இறந்ததற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கமாண்டர் சுஹைருலர் சரிப் தெரிவித்தார்.

Related News