கோலாலம்பூர், மார்ச்.29-
மலேசியாவில் போதைப்பொருள் கலந்த ஸ்ட்ராபெர்ரி குயிக் மிட்டாய்கள் விநியோகிக்கப்படுவதாகச் சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளில் உண்மையில்லை என காவற்படை உறுதிப்படுத்தியுள்ளது. இது போன்ற மிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவோ அல்லது பாதிப்புகள் ஏற்பட்டதாகவோ எந்தவொரு புகாரும் பதிவாகவில்லை என்றும், இத்தகவல் கடந்த 2025-ஆம் ஆண்டிலிருந்தே அவ்வப்போது வதந்தியாகப் பரப்பப்பட்டு வருவதாகவும் போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு இயக்குனர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார். பெற்றோர்களையும் மாணவர்களையும் எச்சரிக்கையாக இருக்கச் செய்யும் நோக்கில் இத்தகையப் படங்கள் பகிரப்பட்டாலும், ஆதாரமற்ற செய்திகள் மக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்குவதாக அவர் சுட்டிக் காட்டினார்.








