Mar 24, 2026
Thisaigal NewsYouTube
கயா தீவில் இரண்டு வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

கயா தீவில் இரண்டு வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்

Share:

கோத்தா கினபாலு, ஜூலை 12-

கோத்தாகினபாலு, கம்போங் லோக் உரை வீடமைப்பு பகுதியில் நேற்று போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, போதை பொருள் விற்பனையாளர்கள் 7 பேர் கைதாகி உள்ளனர் என கோத்தா கினபாலு வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் காசிம் மூட தெரிவித்தார்.

நேற்று அப்பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை இட்டபோது 20 முதல் 70 வயது நிரம்பிய ஏழ்வர் 9.48 கிராம் எடைக்கொண்ட ஷாபு எனும் போதை பொருள் வந்திருந்தது தெரியவந்துள்ளது. அதே சமயம் அவர்கள் மீது இட்ட சிறுநீர் பரிசோதனையில் , 5வர் போத பொருள் உட்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளதாக கசிம் மூடா தெரிவித்தார்.

Related News