Mar 24, 2026
Thisaigal NewsYouTube
பாலர் பள்ளி எண்ணிக்கை அதிகரித்துள்ளது
தற்போதைய செய்திகள்

பாலர் பள்ளி எண்ணிக்கை அதிகரித்துள்ளது

Share:

ஜூலை 20-

நாட்டில் கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் பாலர் பள்ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதன் அமைச்ர் பத்லீனா சிடெக் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஆண்டில் 9 ஆயிரத்து 909 பாலர் பள்ளிகள் செயல்பட்டன. இந்த எண்ணிக்கையில் 133 புதிய பள்ளிகள் அதிகரிக்கப்பட்டு, நடப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 042 ஆக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சின் கீழ் செயல்படக்கூடிய பாலர் பள்ளிகள், ஓரிட மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளைப் பொறுத்து அமைக்கப்பட்டு வருவதாக பத்லீனா சிடெக் தெரிவித்தார்.

தொடக்க கல்விக்கு முன்னதாக, மழலையர் கல்வியின் முக்கியத்துவத்திற்கு கல்வி அமைச்சு செலுத்தி வரும் அதீத அக்கறையே இது காட்டுவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News