சட்டவிரோத பணம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பெர்லிஸ் மாநில முன்னாள் மந்திரி புசார் அஸ்லான் மான் , இரண்டாவது முறையாக இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி அஸூரா அல்வி முன்னிலையில் நிறுத்தப்பட்ட அஸ்லான் மான், பத்து லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியைச் சட்டவிரோதமாக பெற்றதாக அவருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த 2014 ஆம் ஆண்டிற்கும் 2017 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள வங்கிகளில் அஸ்லான் மான் இக்குற்றங்களைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 15 ஆண்டு சிறை மற்றும் 5 மடங்கு அபராதம் விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சட்டவிரோத பண மாற்றம் சட்டத்தின் கீழ் அஸ்லான் மான் 5 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான ஐந்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து அஸ்லான் மான் விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 50 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிபதி அஸூரா அல்வி அனுமதி அளித்தார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


