Mar 14, 2026
Thisaigal NewsYouTube
அந்நிய நாட்டுப் பெண் கொலை, இருவர் கைது
தற்போதைய செய்திகள்

அந்நிய நாட்டுப் பெண் கொலை, இருவர் கைது

Share:

அந்நிய நாட்டுப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் இக்கொலையில் சம்பந்தப்பட்டு இருக்கக்கூடும் என்று நம்பப்படும் இரு நபர்களை போ​லீசார் கைது செய்துள்ளனர்.

ஜோகூர்பாரு, தாமான் உங்கு தும் அமினாவில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த இக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த இரு நபர்களும் புலன் விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போ​லீசார் ​நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளனர் என்று ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் மஹின்டர் சிங் தெரிவித்தார்.

அந்நிய நாட்டைச் சேர்ந்த 41 வயது பெண்ணும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தம்பியான 24 வயது நபரும் கைது செய்யப்பட்டு, இக்கொலைக்கு அவர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு கத்தியை போ​லீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த ​மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி பல்வீர் சிங் குறிப்பிட்டனர்.

கொலை செய்யப்பட்ட 41 வயதுடைய பெண்ணின் சடலம், குப்பைத் தொட்டி ஒன்றில் கடந்த ஞாயிற்று​க்கிழமை பொது மக்களால் கண்டு பிடிக்கப்பட்டதாக ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து