Dec 5, 2025
Thisaigal NewsYouTube
தீர்ப்பு முறைகேட்டில் சிக்கிய மூத்த நீதிபதி நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படக்கூடாது
தற்போதைய செய்திகள்

தீர்ப்பு முறைகேட்டில் சிக்கிய மூத்த நீதிபதி நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படக்கூடாது

Share:

கோலாலம்பூர், ஜூலை.15-

தீர்ப்பு முறைகேட்டில் சிக்கியதாகக் கூறப்படும் மூத்த நீதிபதி ஒருவர், நாட்டின் தலைமை நீதிபதி பொறுப்புக்கு நியமிக்கப்படக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

புத்ராஜெயாவில் பிரதமரின் அதிகாரத்துவ இல்லத்தில் நேற்று நடைபெற்ற டத்தோஸ்ரீ அன்வாருடன் பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்வில் எம்.பி.க்கள் சிலர், இந்த கருத்தை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆட்சியாளர்களின் சமஸ்தானபதிகள் மாநாடு இன்று தொடங்கியுள்ள வேளையில் தலைமை நீதிபதி பொறுப்புக்கு அந்த சர்ச்சைக்குரிய நீதிபதியின் பெயரைப் பிரதமர் பரிந்துரைத்தாரா? என்பது விளக்கப்படவில்லை.

எனினும் தாம் யாருடையப் பெயரைச் சமர்ப்பித்தாலும் எதுவும் தமது கைகளில் இல்லை என்றும், அது குறித்து தீர்மானிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் ஆட்சியாளர்கள் என்று அன்வார் விளக்கம் அளித்ததாக பக்காத்தான் ஹராப்பான் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்