May 18, 2026
Thisaigal NewsYouTube
கூட்டரசு நீதிமன்றத்திலிருந்து முழு மரியாதையுடன் விடைபெற்றார் நாட்டின் முதலாவது பெண் தலைமை நீதிபதி தெங்கு மைமூன்
தற்போதைய செய்திகள்

கூட்டரசு நீதிமன்றத்திலிருந்து முழு மரியாதையுடன் விடைபெற்றார் நாட்டின் முதலாவது பெண் தலைமை நீதிபதி தெங்கு மைமூன்

Share:

கோலாலம்பூர், ஜூலை.01-

நாட்டின் முதலாவது பெண் தலைமை நீதிபதி என்ற முறையில் இன்று பணி ஓய்வு பெறும் துன் தெங்கு மைமூன் துவான் மாட்டிற்கு, கூட்டரசு நீதிமன்றத்தில் முழு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்பட்டது.

தெங்கு மைமூன் கட்டாயப் பணி ஓய்வு வயதை எட்டிய இன்றைய தினத்தில், கூட்டரசு நீதிமன்ற தலைமை நீதிபதி என்ற முறையில் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியபோது கூட்டரசு நீதிமன்ற நடவடிக்கைகள் உணர்ச்சிகரமாக மாறியது.

மூடா கட்சியின் பொதுச் செயலாளர் அமீர் ஹாரிரி அப்துல் ஹாடி, சவால் விட்ட அரசியலமைப்புச் சட்ட விதி தொடர்பான வழக்கில் அந்த விதி செல்லாது என்று ஐவர் கொண்ட நீதிபதிகள் குழுவினருக்குத் தலைமையேற்ற தெங்கு மைமூன், தனது அதிரடித் தீர்ப்பை வழங்கினார். நீதிபரிபாலனத் துறைக்குத் தலைமையேற்ற தெங்கு மைமூன் வழங்கிய கடைசித் தீர்ப்பும் இதுவே.

பிரியாவிடை நிகழ்வில் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தைப் பிரதிநிதித்து கலந்து கொண்ட அதன் துணைத் தலைவர் ஆனந்த் ராஜ், பணி ஓய்வு பெறும் தெங்கு மைமூனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மிக நெகிழ்ச்சியான பிரியாவிடை உரையை நிகழ்த்தினார்.

இன்று நாம் ஒரு தலைமை நீதிபதியின் சேவையின் முடிவைக் காண்பது மட்டுமல்லாமல், மலேசிய நீதித்துறையின் முகத்தை முற்றிலுமாக மாற்றிய ஓர் அசாதாரண மரபையும் கொண்டாடுகிறோம் என்று தெங்கு மைமூனுக்கு ஆனந்தராஜ் புகழாரம் சூட்டினார்.

தெங்கு மைமூன் நாட்டின் வரலாற்றில் முதல் பெண் தலைமை நீதிபதி மட்டுமல்ல, 1988 ஆம் ஆண்டு மலேசியா நீதித்துறை, நெருக்கடியால் களங்கப்படுத்தப்பட்ட நிலையில் நீதித்துறையின் கண்ணியத்தைக் காத்த பெருமை இவரையே சாரும் என்றார்.

தெங்கு மைமூன் நீதிபரிபாலனத்திற்கு தலைமையேற்றது மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்து, காமன்வெல்த்தின் சிறந்த நீதித்துறைக்கு இணையாக நிலைநிறுத்தியுள்ளார் என்று ஆனந்த ராஜ் உணர்ச்சிவசப்பட்ட தொனியில் புகழ் மாலை சூட்டினார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி