போலி பண நோட்டை வைத்திருந்ததற்காகவும், பயன்படுத்தியதற்காகவும் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை, இரண்டு வெவ்வேறு நீதிமன்றங்களில் ஹோட்டல் தொழிலாளி ஒருவர் இன்று ஒப்புக்கொண்டார்.
53 வயதான சுஹான் கான் முகமது அலி என்ற அந்த ஹோட்டல் பணியாளர், ஜார்ஜ்டவுன், செஷன்ஸ் நீதிமன்றம் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த மார்ச 11 ஆம் தேதி, பத்து ஃபிரங்கி, செவன் இலவன் கடையில் நூறு வெள்ளி போலி நோட்டைப் பயன்படுத்தியதற்காக செஷன்ஸ் நீதிமன்றத்திலும், / மார்ச 20 ஆம் தேதி, ஒரு ஹோட்டல் அறையில் 15 போலி நோட்டுகளை வைத்திருந்ததற்காக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் குற்றஞ் சாட்டப்பட்டார்.
அதே நீதிமன்றத்தில், சுஹான் கான் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து 21 போலி நோட்டுகளை வைத்திருந்ததற்காக மற்றொரு குற்றச் சாட்டையும் எதிர்நோக்கினார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


