Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஆறு முன்னாள் பல்கலைக்கழக மாணவர்கள் தூக்கிலிருந்து தப்பினர்

Share:

புத்ராஜெயா, பிப்.28-

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, கடற்படை கேடட் பயிற்சி மாணவன் சுல்ஃபர்ஹான் ஒஸ்மான் சுல்கர்னாயின் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த தேசிய தற்காப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆறு முன்னாள் மாணவர்கள், தூக்கிலிருந்து தப்பினர்.

அந்த ஆறு மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் இன்று 18 ஆண்டு சிறைத் தண்டனையாக மாற்றியது.

மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற மலாயா தலைமை நீதிபதி டத்தோஶ்ரீ ஹஸ்னா முகமட் ஹாஷிம், அறுவருக்கு எதிரான தூக்குத் தண்டனையை ரத்து செய்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுன் முதல் தேதி செர்டாங் மருத்துவமனையில் உயிரிழந்த அந்த பயிற்சி மாணவனின் மரணத்தைத் தொடர்ந்து அவரைக் தாக்கியதாக நம்பப்படும் அந்த 6 பல்கலைக்கழக மாணவர்கள் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு