Mar 9, 2026
Thisaigal NewsYouTube
பேராசிரியர் சையத் முஹம்மது நாகிப் அல்-அத்தாஸ் மறைவிற்கு அன்வார் இரங்கல்
தற்போதைய செய்திகள்

பேராசிரியர் சையத் முஹம்மது நாகிப் அல்-அத்தாஸ் மறைவிற்கு அன்வார் இரங்கல்

Share:

அரச விருது பெற்ற பேராசிரியர் டான் ஸ்ரீ சையத் முஹம்மது நாகிப் அல்-அத்தாஸ் இன் மறைவுக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், "நமது சகாப்தத்தின் மிகச்சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர்" என்று அவர் குறித்து விவரித்துள்ளார்.

மிகச் சிறந்த தத்துவஞானியான சையத் முஹம்மது நாகிப், நாம் என்ன கற்கிறோம் என்பதை மட்டுமல்ல; அறிவு என்பதே எதற்காக? என்று கேள்வி எழுப்பியவர் என்றும் அன்வார் விவரித்துள்ளார்.

‘Islam and Secularism’ மற்றும் “Prolegomena to the Metaphysics of Islam” உள்ளிட்ட அவரது மகத்தான படைப்புகள் மூலமாக அறிவின் மதச்சார்பற்ற நிலையை சிந்தனைக்கு உட்படுத்தினார்.

மேலும் இஸ்லாமிய உலகக் கண்ணோட்டத்தின் அறிவுசார் அடித்தளங்களையும் விளக்கமாக முன்வைத்தார்.

மலேசியா மட்டுமல்ல, உலகமே அவர் சொல்வதைக் கேட்டது என்று அன்வார் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ISTAC என்றழைக்கப்படும், சர்வதேச இஸ்லாமிய சிந்தனை மற்றும் நாகரிக நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநரான சையத் முஹம்மது நக்கீப், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.47 மணியளவில் காலமானார்.

Related News

ஆசியா முழுவதும் விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு: 900-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து; ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு

ஆசியா முழுவதும் விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு: 900-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து; ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு

கேமரான் மலை பயணத்தில் மாயமான 19 வயது இளைஞர் பெசுட் அருகே சடலமாக காணப்பட்டார்

கேமரான் மலை பயணத்தில் மாயமான 19 வயது இளைஞர் பெசுட் அருகே சடலமாக காணப்பட்டார்

எஸ்பிஎம் 2025 தேர்வு முடிவுகளானது மார்ச் 31-ல் வெளியீடு - கல்வி அமைச்சு அறிவிப்பு

எஸ்பிஎம் 2025 தேர்வு முடிவுகளானது மார்ச் 31-ல் வெளியீடு - கல்வி அமைச்சு அறிவிப்பு

பயிற்சி மருத்துவர் மரணம்: கிளந்தான் சுகாதாரத் துறை விசாரணைக் குழுவை அமைத்தது

பயிற்சி மருத்துவர் மரணம்: கிளந்தான் சுகாதாரத் துறை விசாரணைக் குழுவை அமைத்தது

ஆலய விவகாரங்களை சுமூகமான முறையில் தீர்க்க சட்டக் குழுவை அமைத்தது இந்து சங்கம்

ஆலய விவகாரங்களை சுமூகமான முறையில் தீர்க்க சட்டக் குழுவை அமைத்தது இந்து சங்கம்

நயிமா அப்துல் காலிட் தொடுத்த வழக்கு: நீதிமன்றத்தில் பதிலளிக்க அரசு தயார் என பிரதமர் உறுதி

நயிமா அப்துல் காலிட் தொடுத்த வழக்கு: நீதிமன்றத்தில் பதிலளிக்க அரசு தயார் என பிரதமர் உறுதி