கோலாலம்பூர், செராஸ் ஜெயா இடைநிலைப் பள்ளியின் கட்டடத் தொகுதியில், நேற்று மதியம் 12.40 மணியளவில் கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று கல்வித் துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஜனவரியில், பள்ளி கட்டடத் தொகுதி கூரையின் கட்டமைப்பில் ஏற்பட்ட பழுதினால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.
இதனால், கட்டட சுவரில் ஒரு சிறு பகுதி இடிந்து விழுந்தது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அக்கட்டடப் பகுதி உடனடியாக காலி செய்யப்பட்டதாக லிம் ஹுய் யிங் குறிப்பிட்டார்.
அந்தக் கட்டடப் பகுதி மாணவர் ஒன்றுக் கூடல் சபைக்குப் பயன்படுத்தப்பட்டு வந்ததாக துணை அமைச்சர் விளக்கினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


