கோலாலம்பூர், செராஸ் ஜெயா இடைநிலைப் பள்ளியின் கட்டடத் தொகுதியில், நேற்று மதியம் 12.40 மணியளவில் கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று கல்வித் துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஜனவரியில், பள்ளி கட்டடத் தொகுதி கூரையின் கட்டமைப்பில் ஏற்பட்ட பழுதினால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.
இதனால், கட்டட சுவரில் ஒரு சிறு பகுதி இடிந்து விழுந்தது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அக்கட்டடப் பகுதி உடனடியாக காலி செய்யப்பட்டதாக லிம் ஹுய் யிங் குறிப்பிட்டார்.
அந்தக் கட்டடப் பகுதி மாணவர் ஒன்றுக் கூடல் சபைக்குப் பயன்படுத்தப்பட்டு வந்ததாக துணை அமைச்சர் விளக்கினார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


