Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தனிநபர்களின் கைப்பேசியை போலீஸ் விருப்பம் போல் சோதனையிட முடியாது

Share:

கோலாலம்பூர், ஜன.17-


தங்களின் விருப்பப்படி தனிநபரின் கைப்பேசியை சோதனையிட முடியும் என்று கூறும் போலீசாரின் வாதம் தவறானதாகும் என்று வழக்கறிஞர் ஒருவர் வாதிடுகிறார்.

தனிநபரின் கைப்பேசியை வாங்கி, போலீசார் சோதனையிட முடியாது. அவ்வாறு சோதனையிட்டால் அது தனிநபர் ஒருவரின் உரிமையை ஆக்கிரமிப்பதாகும் என்று வழக்கறிஞர் எஸ். ரவீந்திரன் பதில் அளித்துள்ளார்.

ஒரு நபருக்கும், அவரின் வழக்கறிஞருக்கும் பல்வேறு விவகாரங்கள் பரிமாறப்பட்டு இருக்கலாம். அதில் அந்த தனிநபரின் வழக்கு தொடர்புடைய கோப்புகளும் இருக்கலாம். அவை ரகசியமானவை மட்டுமல்ல, பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்நிலையில், ஒருவரின் கைப்பேசியை வாங்கி போலீசார் சோதனையிட முடியும் என்று கூறுவது, அந்த தனிநபரின் சிறப்புரிமைக்கு எதிரான செயலாகும் என்று வழக்கறிஞர் ரவீந்திரன் கூறுகிறார்.

தனிநபர் ஒருவருக்கும், அவரின் வழக்கறிஞருக்கும் இடையிலான உரையாடல் மிக ரகசியமானதாகும். அவர்கள் குற்றத்துடன் பிணைக்கப்பட்டிருந்தாலே தவிர மற்றப்படி விருப்பம் போல் கைப்பேசியை சோதனையிடுவதற்கும், ரகசியங்களை அறிய முற்படுவதற்கும் 1950 ஆம் ஆண்டு சாட்சிய சட்டம் 126 ஆவது பிரிவு தடை செய்வதாக ரவீந்திரன் தெளிவுபடுத்தினார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்