May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தனிநபர்களின் கைப்பேசியை போலீஸ் விருப்பம் போல் சோதனையிட முடியாது

Share:

கோலாலம்பூர், ஜன.17-


தங்களின் விருப்பப்படி தனிநபரின் கைப்பேசியை சோதனையிட முடியும் என்று கூறும் போலீசாரின் வாதம் தவறானதாகும் என்று வழக்கறிஞர் ஒருவர் வாதிடுகிறார்.

தனிநபரின் கைப்பேசியை வாங்கி, போலீசார் சோதனையிட முடியாது. அவ்வாறு சோதனையிட்டால் அது தனிநபர் ஒருவரின் உரிமையை ஆக்கிரமிப்பதாகும் என்று வழக்கறிஞர் எஸ். ரவீந்திரன் பதில் அளித்துள்ளார்.

ஒரு நபருக்கும், அவரின் வழக்கறிஞருக்கும் பல்வேறு விவகாரங்கள் பரிமாறப்பட்டு இருக்கலாம். அதில் அந்த தனிநபரின் வழக்கு தொடர்புடைய கோப்புகளும் இருக்கலாம். அவை ரகசியமானவை மட்டுமல்ல, பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்நிலையில், ஒருவரின் கைப்பேசியை வாங்கி போலீசார் சோதனையிட முடியும் என்று கூறுவது, அந்த தனிநபரின் சிறப்புரிமைக்கு எதிரான செயலாகும் என்று வழக்கறிஞர் ரவீந்திரன் கூறுகிறார்.

தனிநபர் ஒருவருக்கும், அவரின் வழக்கறிஞருக்கும் இடையிலான உரையாடல் மிக ரகசியமானதாகும். அவர்கள் குற்றத்துடன் பிணைக்கப்பட்டிருந்தாலே தவிர மற்றப்படி விருப்பம் போல் கைப்பேசியை சோதனையிடுவதற்கும், ரகசியங்களை அறிய முற்படுவதற்கும் 1950 ஆம் ஆண்டு சாட்சிய சட்டம் 126 ஆவது பிரிவு தடை செய்வதாக ரவீந்திரன் தெளிவுபடுத்தினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்