Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தனிநபர்களின் கைப்பேசியை போலீஸ் விருப்பம் போல் சோதனையிட முடியாது

Share:

கோலாலம்பூர், ஜன.17-


தங்களின் விருப்பப்படி தனிநபரின் கைப்பேசியை சோதனையிட முடியும் என்று கூறும் போலீசாரின் வாதம் தவறானதாகும் என்று வழக்கறிஞர் ஒருவர் வாதிடுகிறார்.

தனிநபரின் கைப்பேசியை வாங்கி, போலீசார் சோதனையிட முடியாது. அவ்வாறு சோதனையிட்டால் அது தனிநபர் ஒருவரின் உரிமையை ஆக்கிரமிப்பதாகும் என்று வழக்கறிஞர் எஸ். ரவீந்திரன் பதில் அளித்துள்ளார்.

ஒரு நபருக்கும், அவரின் வழக்கறிஞருக்கும் பல்வேறு விவகாரங்கள் பரிமாறப்பட்டு இருக்கலாம். அதில் அந்த தனிநபரின் வழக்கு தொடர்புடைய கோப்புகளும் இருக்கலாம். அவை ரகசியமானவை மட்டுமல்ல, பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்நிலையில், ஒருவரின் கைப்பேசியை வாங்கி போலீசார் சோதனையிட முடியும் என்று கூறுவது, அந்த தனிநபரின் சிறப்புரிமைக்கு எதிரான செயலாகும் என்று வழக்கறிஞர் ரவீந்திரன் கூறுகிறார்.

தனிநபர் ஒருவருக்கும், அவரின் வழக்கறிஞருக்கும் இடையிலான உரையாடல் மிக ரகசியமானதாகும். அவர்கள் குற்றத்துடன் பிணைக்கப்பட்டிருந்தாலே தவிர மற்றப்படி விருப்பம் போல் கைப்பேசியை சோதனையிடுவதற்கும், ரகசியங்களை அறிய முற்படுவதற்கும் 1950 ஆம் ஆண்டு சாட்சிய சட்டம் 126 ஆவது பிரிவு தடை செய்வதாக ரவீந்திரன் தெளிவுபடுத்தினார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி