Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கோபத்தைத் தூண்டும் சொற்களையோ செயல்களையோ தவிர்க்க வேண்டும்

Share:

கிள்ளான், பிப்.16-

கோபத்தைத் தூண்டும் சொற்களையோ செயல்களையோ தவிர்க்குமாறு நாட்டில் உள்ள பல்வேறு இன மக்களை சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நாயிம் மொக்தார் அறிவுறுத்தியுள்ளார். கோத்தா வாரிசானில் மக்காச்சோள விற்பனையாளர் ஒருவர் இனவாத வாசகங்கள் அடங்கிய அறிவிப்புப் பலகையை வைத்தது தொடர்பில் எழுந்த சர்ச்சையை அடுத்தே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒருவரையொருவர் மதித்து நடக்க வேண்டும் என்றும், இன உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இஸ்லாத்தில் பல இனங்கள், மதங்கள் இருந்தாலும் ஒற்றுமையை வலுப்படுத்துவது ஊக்குவிக்கப்படுகிறது என்றும், பன்முகத்தன்மையை மதித்து நடக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். மடானி அரசாங்கமும் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்