சபா மாநிலத்தின் Kampung Weston, Beaufort பகுதியில் மின்சாரம் தாக்கி மூன்று போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சோகச் சம்பவத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து, இனி இது போன்ற விபத்துகள் மீண்டும் நிகழாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உயிரிழந்த போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும், அரச மலேசிய போலீஸ் படைக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதமர், நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் காக்க அவர்கள் ஆற்றிய சேவையும் தியாகமும் என்றும் நினைவுகூரப்படும் என்று கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய நிலையில், சாலையில் மூவர் உயிரிழந்த நிலையில் கிடந்த காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.








