கோலாலம்பூர், ஜாலான் எச்.எஸ்.லீ,யில் விற்றிருக்கும் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலின் தங்க விமான, வெள்ளி, பந்தன, அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மகா கும்பாபிஷேகம் நாளை ஜுன் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.10 மணிக்கு மேல் பகல் 12.30 மணிக்குள் வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.
இந்த மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று ஜுன் 24 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் கும்பாபிஷேகத் தினமான நாளை ஜுன் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களுக்கு இரவு 7.30 மணிக்கு மேல் கோயில் வளாகத்தில் தமிழகத்தை சேர்ந்த சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் முத்துச்சிற்பி, பாடகர் செந்தில் தாஸ் மற்றும் உள்ளூர் பாடகரான ஈப்போவைச் சேர்ந்த யமுனா ஆறுமுகம் ஆகியோரின் இசைக் கச்சேரிகள் நடைபெறவிருக்கின்றன என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா அறிவித்துள்ளார்.
முன்னதாக, ஆலயத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி, இரவு வரையில் மூல விக்கிரங்களுக்கு எண்ணெய் சாத்துதல் நிகழ்வு நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்நிகழ்வுகளில் பொது மக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொள்கிறார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


