Mar 24, 2026
Thisaigal NewsYouTube
எஸ்டிஆர் திட்டத்தின் மூன்றாம் கட்ட ரொக்கப் பண உதவி நாளை செவ்வாய்க்கிழமை பட்டுவாடா
தற்போதைய செய்திகள்

எஸ்டிஆர் திட்டத்தின் மூன்றாம் கட்ட ரொக்கப் பண உதவி நாளை செவ்வாய்க்கிழமை பட்டுவாடா

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.11-

எஸ்டிஆர் எனப்படும் சும்பாங்கான் தூனாய் ரஹ்மா திட்டத்தின் மூன்றாம் கட்ட ரொக்கப் பண உதவி, நாளை ஆகஸ்ட் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, எஸ்டிஆர் பெறுநர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

86 லட்சம் மக்களுக்கு வழங்கப்படும் இந்த எஸ்டிஆர் நிதி உதவிக்காக அரசாங்கம் மொத்தம் 200 கோடி ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான முதல் கட்ட எஸ்டிஆர் நிதியில் பெறுநர்களின் எண்ணிக்கை மேலும் 3 லட்சமாக அதிகரிக்கப்பட்டு, பெறுநர்களின் மொத்த எண்ணிக்கை 83 லட்சத்திலிருந்து 86 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிதி உதவி கிடைக்காதவர்கள் செய்து கொண்ட மேல்முறையீட்டின் அடிப்படையில் தகுதி பெறுகின்றவர்களின் நிலை ஆராயப்பட்டு, எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதாக அது அறிவித்துள்ளது.

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு