போலியான Dato Sri பட்டத்தை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த சந்தேகிக்கும் நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சந்தேகிக்கும் 56 வயது Mohd Fared Abdul Ghani - யை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு தங்களின் தரப்புக்கு உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாக Kelantan போலீஸ் தலைவர் Datuk Muhamad Zaki Harun கூறினார்.
சந்தேகிக்கும் அந்நபரை கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் அந்நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக Muhamad Zaki தெரிவித்தார்.
முன்னதாக, Kelantan குத்துச் சண்டை சங்கத்தின் இரண்டு உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது குறித்து அந்த போலி Dato Sri பட்டத்தை கொண்டிருந்த அந்நபர் அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்ததாக பொது மக்களிடமிருந்து புகார் ஒன்று கிடைக்க பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.








